வெள்ளி, செப்டம்பர் 16, 2016

குறள் எண்: 0411 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0411}

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

விழியப்பன் விளக்கம்: கேட்பதால் விளையும் அறிவுச் செல்வமானது, பல்வகைச் செல்வங்களில் ஒன்றாகும்; அச்செல்வம், செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
(அது போல்...)
பிறப்பால் கிடைக்கும் பெற்றோர் உறவானது, பல்வகை உறவுகளில் ஒன்றாகும்; அவ்வுறவு, உறவுகள் அனைத்திலும் சிறந்ததாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக