வெள்ளி, செப்டம்பர் 23, 2016

குறள் எண்: 0418 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0418}

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி

விழியப்பன் விளக்கம்: கேள்வியெனும் முதலீட்டால், கேள்விஞானத்தை வளர்க்கும் திறனற்றோரின் செவிகள்; கேட்கும் திறனிருப்பினும், கேட்கவியலாச் செவிகளாகவே உணரப்படும்.
(அது போல்...)
சிந்தனையெனும் விவசாயத்தால், பகுத்தறிவை அருவடைக்கும் இயல்பற்றோரின் மூளை; இயங்கும் நிலையிலிருப்பினும், மரணமடைந்த மூளைக்கு இணையாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக