வெள்ளி, செப்டம்பர் 30, 2016

குறள் எண்: 0425 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0425}

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு

விழியப்பன் விளக்கம்: உலக உயிர்களை, அரவணைப்பதே சிறந்த அறிவாகும்; பார்த்ததும் மலர்ந்து, பின்னர் சுருங்கும் இயல்பற்றதே அறிவாகும்.
(அது போல்...)
சக ஊழியர்களை, உயர்த்துவதே உன்னத நேர்மையாகும்; நம்பிக்கை அளித்து, பின் வஞ்சிக்கும் குணமற்றதே நேர்மையாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக