வியாழன், செப்டம்பர் 22, 2016

குறள் எண்: 0417 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0417}

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்

விழியப்பன் விளக்கம்: கேள்வியெனும் தேடலால், ஆழ்ந்தறிந்த அறிவைப் பெற்றவர்; தவறான புரிதல் இருப்பினும், அறிவிலியான முறையில் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
பொதுநலம் பேணுதலில், முழுமையாய் தம்மை ஆட்படுத்தியோர்; குறையுடைய எதிர்கட்சிகளைக் கூட, சுயநலமான எண்ணத்தில் விமர்சிக்கமாட்டார்கள்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக