செவ்வாய், செப்டம்பர் 20, 2016

குறள் எண்: 0415 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0415}

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமுடைய சான்றோரின், பேச்சு மூலம் பெறப்படும் கேள்விஞானம்; வழுக்கும் தன்மையுடைய இடத்தில், உறுதியாய் நிற்க உதவும் ஊன்றுகோல் போன்றதாகும்.
(அது போல்...)
அருளுடைய குருவின், வழிகாட்டல் மூலம் கற்கும் மெய்ஞானம்; அதீதமான ஆழமுள்ள கடலில், மூழ்காமல் கரையேற உதவும் மிதவை போன்றதாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக