ஞாயிறு, செப்டம்பர் 04, 2016

குறள் எண்: 0399 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0399}

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்

விழியப்பன் விளக்கம்: தான் இன்பமடைந்த கல்வியால், இவ்வுலகம் இன்புறுவது கண்டு; கற்றறிந்த சான்றோர்கள், கல்வியின் மேல் மோகம் கொள்வர்.  
(அது போல்...)
தமக்கு மகிழ்வளித்த மகளால், மருபெற்றோரும் மகிழ்வதைக் கண்டு; உன்னதமானப் பெற்றோர்கள், மகளின் மீது தீராப்பாசம் கொள்வர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக