வியாழன், செப்டம்பர் 08, 2016

ஈகைப் பெருநாள் விடுமுறையும் என் இயலாமையும்


            நாளை முதல் 9 நாட்களுக்கு தொடர் விடுமுறை. ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்திற்காக இங்கே கொடுக்கப்படும் விடுமுறை. 4 வருட அபுதாபி வாழ்க்கையில், ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்திற்காக கொடுக்கப்படும் 8-ஆவது ஈகைப் பெருநாள் விடுமுறையாகும் இது. இவற்றில் 5 முறை 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்திருக்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை! இதுவரை, ஒரு விடுமுறையில் கூட வெளியே பயணிக்க முடியவில்லை. 2013-ஆம் ஆண்டு - என் மகளின் பிறந்தநாளைக் கொண்டாட இந்திய சென்றுவிட்டு வந்த குறுகிய வாரத்தில் - முதல் ஈகைப் பெருநாள் விடுமுறைத் துவங்கியதால்; சரியாய் திட்டமிட்டு அதை உபயோகிக்க முடியவில்லை.  அந்த விடுமுறையின் போது, கத்தாரில் இருக்கும் என் தம்பியைக் காண திட்டமிட்டு பயணச்சீட்டும் வாங்கியிருந்தேன். ஆனால், பயணத்தை மேற்கொள்ள முடியாமல் விமான நிலையத்தில் இருந்து திரும்பிவரும் ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. 

     அம்முதல் அனுபவம் துவங்கி, ஏதேனும் ஒரு வகையில் ஈகைப் பெருநாள் விடுமுறையைப் பயன்படுத்த முடியாத சூழல் தொடர்கிறது. சென்ற சூலை மாதம் கிடைத்த 9 நாட்களில் கூட - இந்தியாவில் ஒரு முக்கிய வேலை இருந்தும் - பயணம் செய்ய முடியாத சூழல். இந்த முறையும் அவ்வாறே நிகழ்ந்திருக்கிறது. சிலருக்கு விடுப்பு இல்லை (அல்லது) பணப்பிரச்சனை போன்ற கரணங்கள் இருக்கும். அப்படி ஏதும் இல்லையெனினும், இதுவரை ஒரு பயணம் கூட சாத்தியப்படவில்லை. இதுவே, நான் இங்கிருக்கும் இருந்து ஆண்டாய் இருக்கும் என்பதால் - இனியும், இந்தப் பெருநாள் விடுமுறையில் பயணிக்கும் அனுபவம் வாய்க்காது. ஒருவேளை, இந்தக் கொண்டாட்ட காலத்தில் இந்த மண்ணில்தான் நான் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையோ என்னவோ?  விடுமுறையைக் கழிப்பதில் எனக்கு எந்த சிரமும் இருக்காது; என் சிந்தனைக்கும்/எழுத்துக்கும் - இந்த தொடர் விடுமுறை மியாகப்பெரிய வரம். இருப்பினும்...

பயணத்தில் விடுமுறையைக் கழிக்கமுடியவில்லை என்ற எண்ணம் மட்டும்...   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக