ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

குறள் எண்: 0420 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0420}

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்

விழியப்பன் விளக்கம்: செவிக்கு உணவான, கேள்வியறிவின் சுவை உணராமல்; வாயின் சுவை மட்டும் உணர்ந்தோர், இறந்தாலும்/வாழ்ந்தாலும் என்ன பயன்?
(அது போல்...)
உலகின் உயிரான, விவசாயத்தின் உன்னதம் புரியாமல்; பணத்தின் உன்னதம் மட்டும் உணர்ந்தோர், உயர்ந்தாலும்/தாழ்ந்தாலும் என்ன வித்தியாசம்?
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக