திங்கள், செப்டம்பர் 12, 2016

குறள் எண்: 0407 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0407}

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று

விழியப்பன் விளக்கம்: ஆழமாயும்/சிறப்பாயும் பகுத்தறியும் ஆற்றலற்ற, கற்காதவரின் எழில்மிகு தோற்றம்;  களிமண்ணால் சிறப்பாய் செய்த, அழகிய பெண்சிலைக்கு இணையாகும்.
(அது போல்...)
வாய்மையுடனும்/அறமுடனும் வாழும் இயல்பற்ற, இல்லறத்தின் அழகிய மாடமாளிகை; கற்பனையால் தத்ரூபமாக புனைந்த, இனிய கனவுக்கு ஒப்பாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக