சனி, செப்டம்பர் 10, 2016

குறள் எண்: 0405 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0405}

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

விழியப்பன் விளக்கம்: கற்காதவரின் தற்பெருமை எண்ணம், கற்றவர்களுடன் ஒன்றுகூடி உரையாடும் போது; அவர்களின் பேச்சாலேயே, உறுதியாய் கெடும்.
(அது போல்...)
அறமற்றவரின் போலியான தோற்றம், அறமுள்ளோருடன் சேர்ந்து பழகும் போது; அவர்களின் செயலாலேயே, நிச்சயம் அழியும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக