சனி, செப்டம்பர் 17, 2016

குறள் எண்: 0412 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0412}

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

விழியப்பன் விளக்கம்: செவிக்கு உணவான "கேட்டல்" கிடைக்காத நேரத்தில்; கேள்வியைத் தொடர்ந்திட, வயிற்றுக்கும் சிறிய அளவில் உணவளிக்க வேண்டும்.
(அது போல்...)
மனதை மகிழ்விக்கும் "சிந்தனை" இல்லாத சமயத்தில்; சிந்தனையைப் பெருக்கிட, உடலுக்கும் போதிய அளவில் மகிழ்வளிக்க வேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக