வியாழன், செப்டம்பர் 08, 2016

குறள் எண்: 0403 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0403}

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்

விழியப்பன் விளக்கம்: கற்றோர் அவையில், பேசாதிருக்கும் திண்மையைப் பெற்றிடின்; கற்காத மனிதர்களும், அதிக நன்மை அளிப்பர்.
(அது போல்...)
போர்க் களத்தில், புறமுதுகிடாத மனவலிமைப் பெற்றிருப்பின்; வலிமையற்ற வீரர்களும், பெரு வெற்றிக்கு பங்களிப்பர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக