செவ்வாய், செப்டம்பர் 13, 2016

என்னை மன்னித்தருள்வாய் குருவியே!!!


குருவியொன்றுமகிழ் வுந்துமேல்மோதி
உருவின்றிசிதைந் துஎன்மகிழ்வையும்
கருவழியச்செய் ததுநேற்றுகாலையில்
சுருக்கெனத்தடைக் கட்டையைநான்

அழுத்தமுடியாமல் குருவியின்வாழ்வை
அழித்தஅந்தநி னைவும்இன்றுகாலை
மகிழ்வுந்தின்கறை போக்கியபின்னும்
மனதின்கறைமட் டுமின்னும்குறையாய் 

உன்தாயோபிள்ளை யோஉனைப்பிரிந்து
நொந்துஇருப்பரோ இந்தக்கயவனை?
இல்லைநீஇறந்த செய்திதெரியாமலே
இருள்சூழ்ந்துஅழுது கொண்டிருப்பரோ?

உறவுகள்அவர்க்கு எப்படிச்சொல்வேன்?
உனைக்கொன்றகய வனும்நானென்றே
என்னையறியாமல் நடந்தசெயலுக்காய் 
என்னைமன்னித் தருள்வாய்குருவியே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக