செவ்வாய், செப்டம்பர் 27, 2016

குறள் எண்: 0422 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0422}

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு

விழியப்பன் விளக்கம்: விரும்பும் எல்லாவற்றிலும் மனதைச் செலுத்தாமல், தீயவற்றை அழித்து; நல்லறப் பாதையில், மனதைச் செலுத்துவதே அறிவாகும்.
(அது போல்...)
மயக்கும் விடயங்களில் நேரத்தைச் செலவிடாமல், சிற்றின்பத்தைக் குறைத்து; பேரின்பத் தேடலில், சிந்தனையை வளர்ப்பதே பிறவியாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக