செவ்வாய், செப்டம்பர் 06, 2016

குறள் எண்: 0401 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0401}

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்

விழியப்பன் விளக்கம்: அறிவை நிரப்பும் நூல்களைக் கற்காமல், கற்றோர் அவையில் பேசுதல்; முறையான சூதாடும் அரங்கம் இல்லாமல், சூதாடுதல் போன்றதாகும்.
(அது போல்...)
குடும்பம் நடத்தும் தகுதியைக் கொண்டிராமல், இல்லற வாழ்வில் நுழைதல்; உண்மையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனம்-ஓட்டுதல் போன்றதாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக