திங்கள், செப்டம்பர் 26, 2016

குறள் எண்: 0421 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0421}

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

விழியப்பன் விளக்கம்: அறிவு, ஒருவரை அழிவிலிருந்து காக்கும் கருவியாகும்; அது பகைவர்கள் அழிக்க முடியாத, உள்ளரணாகவும் அமையும்.
(அது போல்...)
பயம், ஒருவரை தீமையிலிருந்து காக்கும் திசைக்காட்டியாகும்; அது பேராசையால் திசைதிருப்ப முடியாத, நங்கூரமாகவும் இருக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக