புதன், செப்டம்பர் 14, 2016

குறள் எண்: 0409 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0409}

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு

விழியப்பன் விளக்கம்: வசதியானக் குடும்பத்தில் பிறந்தும், கற்காதவர் எனின்; வறியக் குடும்பத்தில் பிறந்தும், கற்றவரின் பெருமைக்கு இணையற்றவர் ஆவர்.
(அது போல்...)
ஆகச்சிறந்த நிறுவனத்தில் பணிபுரிந்தும், திறமையில்லாதவர் எனின்; சிறுதொழில் நிறுவனத்தில் பணிபுரியும், திறமையானவரின் சிறப்புக்கு ஒப்பற்றவர் ஆவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக